Sunday, January 17, 2016

இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

அன்புள்ளம் கொண்ட தமிழ் நல உள்ளங்களுக்கு இனிய வணக்கங்கள்!

சற்றே தாமதித்த இனிய பொங்கல் நல்வாழ்த்துக்களும் கூட.

ஒரு குருமுடக்கதிற்குப்பின்  எனது வலைப்பதிவை (ஒரு வழியாக) தொடங்குகிறேன்.

நேற்று எங்கள் (கன்சாஸ் நகர) தமிழ் சங்கத்தின் பொங்கல் விழா ஒரு பெரும் குதூகலத்துடன் கொண்டாடப்பட்டது!

திருக்குறள் போட்டி, ஒயிலாட்டம், கிராமிய நடனங்கள், பட்டிமன்றம் என்று நமது பாரம்பரியம் சார்ந்த பல நிகழ்சிகள் அரங்கத்தை களைகட்டின.    நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களுக்கும்,  அறுசுவை உணவை தயாரித்து வந்த நல்லுள்ளங்களுக்கும், நிகழ்ச்சிகள் நல்ல வண்ணம்  நடைபெற பெருந்துணை புரிந்த அனைத்து தன்னார்வர்களுக்கும் ஒரு பெரும் நன்றி.

மனதிற்கு மிகுந்த மகிழ்ச்சி தந்த சில விஷயங்கள்.

1) ஒரு நீண்ட இடைவெளிக்குப்பிறகு, சென்ற ஆண்டு பட்டிமன்றம் தொடங்கப்பட்டது.  இந்த வருடம் அது தொடர்ந்தது ஒரு நிம்மதியை தந்தது.  இது ஒரு குறைந்தபட்ச கலாச்சார விழிப்புணர்வை நம் மக்கள் மத்தியில் உண்டாக்கும் என்று நம்பலாம்.  வரும் ஆண்டுகளில் தொடரவும் முயற்ச்சிகள் எடுக்கப்படவேண்டும்.

2) புனித லூயிஸ் (St. Louis) நகரிலிருந்து கரும்பு கொண்டு வரப்பட்டது.  பல் வலித்தாலும் இனிமை குறையாதது கரும்பு மட்டுமே.

3) தமிழ்கூர் நல்லலுலகத்தின் தன்னலமற்ற தன்னடக்கம் கொண்ட நம்மவர்கள்.  நம் நீண்ட நெடும் வரலாற்றின் பெரிய சான்று இது ஒன்று.  பக்குவத்தின் உச்சம்!

இந்த நிகழ்வுகள் புலம் பெயர்ந்த மண்ணில் எம்மை மகிழ்வித்தாலும், உள்ளூரில் நம் உரிமைபரிப்பு  தொடரும் போலும்.  காளையை அடக்குவது கொடூர செயலாம்.  இதை முடிவு செய்ய ஒரு உச்ச நீதி மன்றம்.  என்னே ஒரு விந்தை.  இந்த கோமாளி கிழங்களுக்கு யார் கொடுத்தது எனை ஆளும் உரிமை?  இதை மீறி களம் இறங்கி ஜல்லிக்கட்டு நடித்திக்காட்டிய எல்லோரையும் பாராட்ட வேண்டியுள்ளது.  வாழ்க உங்கள் செயல்!

நண்பர்களே - இந்த ஆங்கில புத்தாண்டில் நம் மொழியாம் தமிழை நம் அடுத்த தலைமுறைக்கு கொண்டு சேர்க்க நாம் எல்லா முயற்சியும் எடுப்போம்.  நம் உரையாடல், கவிதைகள், கருத்துப்பரிமாற்றங்கள் எல்லாம் தமிழிலேயே இருக்கட்டும்.

வாழிய செந்தமிழ்!  வாழ்க நற்றமிழர்!!

தமிழ்கூறும் நல்லுலகம் வாழ்க!!!



No comments:

Post a Comment