Monday, January 18, 2016

சிறுவர்களுக்கான வலைப்பக்கங்கள்

நாடு விட்டு நாடு வந்திருக்கும் நம் அனைவரின் பெரிய சவாலே எப்படி நம் குழந்தைகளுக்கு தமிழில் எழுதவும், அதைத்தொர்ந்து பேசவும், படிக்கவும்   கற்று கொடுப்பது என்பது.  நம் காலத்தில் சிறுவர்களுக்கான பல விஷயங்கள் இருந்தன.  குறிப்பாக சிறுவர் புத்தகங்கள், மழலையர் கதைகள், படக்கதைகள் என்று.  இதனால் ஏற்படுகின்ற ஆர்வம் நம்மை அடுத்த தளத்தில் நிறுத்தி வைத்திருக்கிறது.  அதே போல் நம் குழந்தைகளுக்கு ஆர்வம் வர நாம் என்ன செய்ய முடியும்?

எனது எண்ணங்கள்.  சிரிப்பு வந்தால் நான் பொறுப்பில்லை.

1.  நாம் ஏன் நம் குழந்தைகளுக்கு குட்டி கதைகளை வீட்டில் எழுதக்கூடாது?  குறிப்பாக கூகிள் உள்ளீடுக்கருவி (http://www.google.com/inputtools/try/) வழியாக நாமே வாரம் ஒன்று அல்லது இரண்டு கதைகளை எழுதலாமே?  அதை நம் குழந்தைகள் முன் கொடுத்து படிக்க சொல்லலாமே?  இதில் நாம் ஆங்கிலத்தில் தட்டெழுத்து மட்டுமே செய்ய வேண்டும்.  முதலில் கடினமாக இருந்தாலும் போகப்போக நன்றாகவே இருக்கிறது இந்த ஒலிபெயர்த்தல் தமிழ் தட்டெழுத்து.

2.  ஒரு ஆங்கில சொல்லுக்கு சரியான தமிழ் சொல்லை கண்டுபிடிப்பது எளிது.  நாம் செய்யவேண்டியதெல்லாம் தேடலே!  உதாரணமாக கூகிள் சென்று "How to say computer in tamil" என்று அடியுங்கள்.  அது உங்களுக்கு துல்லியமான ஒரு மொழிபெர்ய்பை கொடுக்கும்.  இதையே நம் குழந்தைகள் செய்ய ஊகுவிக்கலாமே.  இல்லையா?  அது மட்டும் அல்ல.   அந்த ஆங்கில வரியில் இடையே தமிழ் சொற்களை புகுத்தி ஆங்கில வார்த்தை என்ன என்று அறியலாம்,   கூகிள் தேடல் இயந்திரம் தானே மொழிக்கண்டுபிடிப்பு செய்யும்.
படம் 1: வலையில் தமிழில் தேடல் 
 

நேரம் கிடைக்காதவர்கள் கீழ்வரும் வலை மீத்தொடுப்புக்களை பார்க்கலாம்.  பிடித்தவற்றை வலை உலாவியின் பிடித்த பக்கங்களில் சேகரித்துக்கொள்ளலாம்.

http://www.siruvarmalar.com/kids-stories-list/
http://tamilsirukatai.blogspot.com/
http://www.koodal.com/jokes/fun_stories.asp

இது போல் மேலும் ஏதேனும் இணையதளவிலாசங்கள் இருந்தால் - நண்பர்களே அவைகளை பகிருங்கள்.

வாரம் ஒன்று அல்லது இரண்டு கதைகள் படித்தாலே குழந்தைகள் எங்கேயோ போய் விடலாம்.

இனி ஒரு விதி செய்வோம்.
மழலையர் மனதில் தமிழ் மொழிப்பற்று வளர்ப்போம்.

தமிழ்க்கூறும் நல்லுலகம் வாழ்க!


No comments:

Post a Comment